BNS 281

BNS பிரிவு 281 – “பொதுவழியில் அவசரமாக அல்லது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்”

          பொதுவழியில் வாகனத்தை ஓட்டும் அல்லது சவாரி செய்வதில் அவசரமாகவும் அல்லது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு, மனிதனின் உயிருக்கு ஆபத்தையும் அனுமதிக்கும், காய வரவைக்கும் விதமாக இருந்தால், குற்றம் 

  • எந்த செயல் குற்றம்:
    பொதுவழியாக வாகனம் அல்லது சைக்கிள் போன்ற வாகனங்களை அவசரமாக அல்லது அஜாக்கிரதமாக ஓட்டுதல் அல்லது சவாரி செய்தல், அதன்மூலம் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுவது அல்லது காயம் தரக்கூடாது.

  • தண்டனை:

    • அதிகபட்ச சிறை: 6 மாதங்கள், அல்லது

    • அபராதம்: ₹1,000, அல்லது

    • இரண்டும் சேர்த்து


    BNS பிரிவு 281, புதிய Bharatiya Nyaya Sanhita சட்டத்தின் முக்கியப்பகுதி ஆகும். இது IPC பிரிவு 279-ஐ மாற்றி வந்துள்ளது, ஆனால் அதே நீதி, செயல்பாடு மற்றும் தண்டனையாகவே அமைகிறது.

    இந்தச் சட்டம் அறிவுரைபூர்வாக அறிவுறுத்துகிறது: பாதுகாப்புடன், கவனமாக மற்றும் பொறுப்புப்படைத்தவம் ஓட்டுங்கள்

    BNS 281 Read More »

    BNS 121(2)

    BNS பிரிவு 121(2)
    பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்க தன்னிச்சையாக காயம் அல்லது கொடுங்காயம் விளைவித்தல்.

            ஒரு பொது ஊழியராக இருப்பவர் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தம் கடமையை செய்கையில், அல்லது அவர் வேறு பொது ஊழியர் எவரும் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தம்முடைய கடமையைச் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் அல்லது தடை படுத்த வேண்டும் என்ற உட்கருத்தோடு அல்லது பொது ஊழியர் என்ற முறையில் தம்முடைய கடமையை சட்டப்படி செய்கையில் அவரால் செய்யப்பட்ட அல்லது செய்ய முயலப்பட்ட ஏதோ ஒன்றின் விளைவாக எவருக்கேனும் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், ஒரு ஆண்டிற்கு குறையாத, பத்தாண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விஜித்து தண்டிக்கப்படுதல் வேண்டும், மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம். 

    BNS 121(2) Read More »

    BNS 121(1)

    BNS பிரிவு 121(1)
    பொது ஊழியரை அவரது கடமையிலிருந்து தடுக்க தன்னிச்சையாக காயம் அல்லது கொடுங்காயம் விளைவித்தல்.

              ஒரு பொது ஊழியராக இருப்பவர் அத்தகைய பொது ஊழியர் என்ற முறையில் தம் கடமையைச் செய்கையில், அல்லது அவர் அல்லது வேறு பொது ஊழியர் எவரும் அத்தகைய பொது ஊழியர் என்று முறையில் தம்முடைய கடமையை செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் அல்லது தடைப்படுத்த வேண்டும் என்ற உட்கருத்தோடு, அல்லது பொது ஊழியர் என்ற முறையில் தம்முடைய கடமையை சட்டப்படி செய்கையில் அவரால் செய்யப்பட்ட அல்லது செய்ய முயலப்பட்ட ஏதோ ஒன்றின் விளைவாக எவருக்கேனும் தன்னிச்சையாக காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், ஐந்தாண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். 

    BNS 121(1) Read More »

    BNS 124(2)

    பிரிவு 124(2)
    அமிலம் முதலாம் அவற்றைப் பயன்படுத்துதல் மூலம் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.

             நிரந்தர அல்லது பகுதி சேதம் அல்லது உருக்குலைவு அல்லது எரித்தல் அல்லது முடமாக்குதல் அல்லது விகாரமாக்குதல் அல்லது ஊனமாக்குதல் அல்லது அந்த நபருக்கு கொடுங்காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் எவரேனும் நபர் மீது அமிலம் வீசும் அல்லது அமிலம் வீச முயற்சிக்கும் அல்லது எவரேனும் நபருக்கு அமிலம் உட்செலுத்த முயற்சிக்கும் அல்லது வேறு வகையில் பயன்படுத்தி முயற்சிக்கும் எவர் ஒருவரும் ஐந்து வருடங்களுக்கு குறையாத ஆனால் 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க சிறை தண்டனைகள் இரண்டில் ஒன்று மற்றும் அபராதமும் மிதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். 

    விளக்கம் 1 – இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக”அமிலம்” என்பதில் அமிலத்தன்மை உள்ள அல்லது அரிப்பு தன்மை அல்லது எரிக்கும் தன்மை உள்ள, அதாவது வடுக்கள் அல்லது விகாரம் அல்லது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்படுத்தி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஏதேனும் பொருள் உள்ளடங்கும். 

    விளக்கம் 2 “நிரந்தர அல்லது பகுதி சேதம்” என்பதில் நபர் ஒருவரின் உடலின் ஏதேனும் பகுதி அல்லது பகுதிகளின் உருக்குலைவு அல்லது முடமாக்குதல் அல்லது எரித்தல் அல்லது விகாரம் ஆக்குதல் அல்லது ஊனமாக்குதல் உள்ளடங்கும்.

    BNS 124(2) Read More »

    BNS 124(1)

    பிரிவு 124(1)
    அமிலம் முதலாம் அவற்றைப் பயன்படுத்துதல் மூலம் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல்.

            காயம் விளைவிக்கும் உட்கருத்துடன் அல்லது அத்தகைய காயம் அநேகமாக விளைவிக்க கூடும் என்று அறிந்து, அமிலம் வீசுவதன் மூலம் அல்லது அந்த நபருக்கு அமிலம் உட்செலுத்துவதன் மூலம் அல்லது எதன் மூலமேனும் நபர் ஒருவரின் உடலின் ஏதேனும் பகுதி அல்லது பகுதிகளை நிரந்தரமாக அல்லது பகுதியாக சேதம் அல்லது உருக்குலைவு அல்லது எரித்தல் அல்லது முடமாக்குதல் அல்லது விகாரமாக்குதல் அல்லது ஊனமாக்குதல் செய்கிற எவரொருவரும் இருவகை சிறை தண்டனைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆனால் ஆயுட்காலம் வரை நீட்டிக்கலாம் சிறந்த தண்டனை மற்றும் அபராதம் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். 

    வரம்புரையாக அத்தகைய பண தண்டம் பாதிப்புற்றவரின் மருத்துவ செலவுகளுக்கு ஈடுகட்டும் வகையில் நியாயமாக நிறுத்த வேண்டும். 

    மேலும் வரும்புரையாக இந்த பிரிவின் கீழ் விதிக்கப்படும் ஏதேனும் அபராதம் பாதிப்புற்றவருக்கு கொடுக்கப்படுதல் வேண்டும்.

    விளக்கம் 1 – இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக”அமிலம்” என்பதில் அமிலத்தன்மை உள்ள அல்லது அரிப்பு தன்மை அல்லது எரிக்கும் தன்மை உள்ள, அதாவது வடுக்கள் அல்லது விகாரம் அல்லது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்படுத்தி மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஏதேனும் பொருள் உள்ளடங்கும். 

    விளக்கம் 2 – “நிரந்தர அல்லது பகுதி சேதம்” என்பதில் நபர் ஒருவரின் உடலின் ஏதேனும் பகுதி அல்லது பகுதிகளின் உருக்குலைவு அல்லது முடமாக்குதல் அல்லது எரித்தல் அல்லது விகாரம் ஆக்குதல் அல்லது ஊனமாக்குதல் உள்ளடங்கும்.

    BNS 124(1) Read More »

    BNS 118(2)

    BNS பிரிவு 118(1)
    அபாயகரமான ஆயுதங்கள் அல்லது உபாயங்கள் மூலம் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

    பிரிவு 118(2) 

             பிரிவு 122(2)ல்  வகைச் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் தவிர தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவிக்கும் எவரொருவரும், ஒரு வருடத்திற்கு குறையாத 10 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று மிதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.

    BNS 118(2) Read More »

    BNS 118(1)

    BNS பிரிவு 118(1)
    அபாயகரமான ஆயுதங்கள் அல்லது உபாயங்கள் மூலம் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்.

                பிரிவு 122(1) ல் வகை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, சுடுவதற்கு, குத்துவதற்கு, அல்லது வெட்டுவதற்கான கருவி எதன் மூலமேனும், அல்லது எந்த கருவியை தாக்கும் கருவியாக பயன்படுத்தினால் அநேகமாக மரணம் விளைவிக்க கூடுமோ அந்த கருவி எதன் மூலமேனும், அல்லது நெருப்பு அல்லது சுடுபொருள் எதன்  மூலமேனும் நஞ்சு , அல்லது அரிக்கும் தன்மை உள்ள பொருள் எதன் மூலமேனும், அல்லது வெடிக்கும் பொருள் எதன் மூலமேனும், அல்லது மூஞ்சிழுத்தால், வீங்கினால் நல்லது ரத்தத்தில் ஏற்றால் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கிற பொருள் எதன் மூலமேனும், அல்லது விலங்கு இதன் மூலமேனும், தன்னிச்சையாக காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்றோ, அல்லது 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டு மிதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும். 

    BNS 118(1) Read More »

    BNS 117(2)

    பிரிவு 117(2)
    தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தலுக்கு தண்டனை

    பிரிவு 122 உட்பிரிவு (2) வில் வகை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, தன்னிச்சையாகக் கொடுங்காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும், ஏழு ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை வகைகள் இரண்டில் ஒன்று விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும், மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்.

    BNS 117(2) Read More »

    BNS 115(2)

    BNS Section 115(2)
    தன்னிச்சையாக காயம் விளைவித்தல். 

       பிரிவு 122, உட்பிரிவு (1) ல் வகை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் தவிர, தன்னிச்சையாக காயம் விளைவிக்கும் எவர் ஒருவரும் ஓராண்டு வரை நீட்டிக்க கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை அல்லது பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.

    BNS 115(2) Read More »

    BNS 340

    BNS - 340 பாரதிய நியாய சன்ஹிதா(BHARATIYA NYAYA SANTHITA)

           BNS 340(IPC 470&471) ➡️

        (1)முழுவதுமாக அல்லது பகுதியில், பொய்யாகப் புனையம் செய்யப்பட்ட ஒரு பொய் பத்திரம், புனையப்பட்ட பத்திரம் அல்லது புனையப்பட்ட ‘மின்னணுப் பதிவுரு’ என்று வழங்கப்படும்.

         (2)ஒரு பத்திரத்தை, அது பொய்யாக புனைப்பட்ட பத்திரம் அல்லது மின்னணுப் பதிவுரு என்று தாம் அறிந்து அல்லது நம்ப காரணம் பெற்றிருந்து, உண்மையானது போன்று மோசடியாக அல்லது நேர்மையற்ற வகையில் உபயோகிக்கிற எவரொருவரும், அந்தப் பத்திரத்தை அவர் புனையப்பட செய்தது போன்று தண்டிக்கப்படுத்தல் வேண்டும்.*

    BNS 340 Read More »